பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தலைவரை அழைக்கும் இந்தியா

இது குறித்து வெளியுவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,
தீவிரவாதிகளின் செல்போன்கள், பிடிபட்ட தீவிரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் சில அமைப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் அதிபர் சர்தாரியுடன் பிரதமர் பேசுவார்.
மேலும் இந்த விஷயம் குறித்து விவாதிக்க அந் நாட்டு உளவுப் பிரிவின் தலைவரை டெல்லிக்கு அனுப்புமாறு கோரியுள்ளோம். பிரதமரும் இந்தக் கோரிக்கையை சர்தாரியிடம் வைப்பார் என்றார்.
இதற்கிடைய சர்தாரி இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்தத் தாக்குதலில் பலியான இந்தியர்களுக்கு எனது இரங்கலை என் நாட்டு மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதிகளின் கொடூரத்துக்கு பாகிஸ்தான் மட்டுமல்ல உலகமே இரையாகிக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
அதே போல பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பிரதமர் மன்மோகன் சி்ங்குக்கும் தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் அவர் தொலைபேசியில் பேசினார். அப்போது தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு சர்தாரி கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications