அனைத்து கட்சி கூட்டம்-அத்வானி புறக்கணிப்பு
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலின் எதிரொலியாக பிரதமர் மன்மோகன் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
இன்று மாலை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களையும் பிரதமர் கேட்டறியவுள்ளார்.
இக்கூட்டத்தில் பாஜக பிரதமர் வேட்பாளரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமா அத்வானி கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
அவருக்குப் பதில் ஜஸ்வந்த் சிங் பங்கேற்பார் எனத் தெரிகிறது.
அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இதில் பங்கேற்கலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications