வலுவிழந்தது புயல் சின்னம் - கன மழை மட்டும் பெய்யும்

வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழக கடலோரப் பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்திருந்தனர்.
இந்தப் புயல் சின்னத்தின் விளைவாக நேற்று இரவு முதல் தமிழக கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த புயல் சின்னம் திடீரென வலுவிழந்து காற்றழுத்த தாழியாக மாறி விட்டது. இது தற்போது அதிராம்பட்டனத்திற்கு 450 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 600 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு வடக்கு நோக்கி நகர்ந்து தூத்துக்குடிக்கும், நாகைக்கும் இடையே, தொண்டி அருகே நாளை காலை கரையைக் கடக்கும்.
புயல் சின்னம் வலுவிழந்து விட்டாலும் கூட கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் பலத்த காற்று வீசும். கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடல் கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீ்னவர்கள் கடலுக்குப் போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications