இலங்கைப் பிரச்சினை சுமூகமாக தீரும்: மணி சங்கர அய்யர்
கும்பகோணம்: இலங்கை அரசு போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீ்ர்வு காண வேண்டும். பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படும் என்று மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த 62-ம் வருடத்திற்கு பிறகு தற்போது தான் அதிக அளவில் மழை பெய்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களான அருணாசல பிரதேசம், நாகலாந்து, இந்தோனேஷியாவில் இயற்கை சீற்றத்தை சமாளிக்கும் வகையில் மூங்கில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
குறைந்த செலவில் அதிக நாட்கள் உழைக்கக் கூடிய மூங்கில் வீடுகளை தமிழகத்திலும் அமைக்கலாம். இதற்கான பயிற்சி கவுகாத்தியில் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியைப் பெற தமிழகத்தில் இருந்து 10 பேர் 3 மாத பயிற்சி்க்கு சென்றுள்ளனர்.
இலங்கையில் நடக்கும் போரால் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆயுதங்கள் மூலம் தீர்வு காண முடியாது. போரை நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
இதற்காக இந்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்ல உள்ளார். அதன் மூலம் சுமுக தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications