போர் திணிக்கப்பட்டால் சந்திக்க தயாராம் பாகிஸ்தான்

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் போர் திணிக்கப்படுவதை
விரும்பவில்லை. ஆனால் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டால் அதை சந்திக்க முழு அளவில் தயாராக இருக்கிறோம்.
எங்களது தாயகத்தைக் காக்கும் கடமையும், பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் அன்பையும், நட்பையும் விரும்புகிறோம். இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவுவதை விரும்புகிறோம். ஆனால் அமைதியாகப் போக வேண்டும் என்ற எங்களது நோக்கத்தை பாகிஸ்தானின் பலவீனமாக யாரும் நினைத்து விடக் கூடாது.
யாரையும் ஒப்படைக்க மாட்டோம்:
மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய, எங்களது நாட்டைச் சேர்ந்த யாரையும், இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது. பாகிஸ்தானியர்கள் யாரேனும் மும்பை சம்பவத்தில் தொடர்பு கொண்டிரு்நதால், பாகிஸ்தான் நாட்டுச் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும்.
எங்களது சுதந்திரமான விசாரணையின் அடிப்படையில்தான் தற்போதைய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது.
கைது செய்யப்பட்ட எந்த பாகிஸ்தானியும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படமாட்டார்.
பாகிஸ்தான் மண்ணை யாரும் தீவிராத செயலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதில் பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில்தான், எங்களது உளவு அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் சமீபத்திய கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்கள் மீது பாகிஸ்தானிய சட்டப்படி விசாரணை நடைபெறும்.
மும்பை சம்பவத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இந்தியா இதுவரை பதில் எதையும் தெரிவிக்காமல் உள்ளது என்றார் குரேஷி.
முதலில் இந்தியா கோரிய தீவிரவாதிகள் யாரும் பாகிஸ்தானில் இல்லை என்றது அந்நாட்டு அரசு. அடுத்து, பாகிஸ்தானியர்கள் யாருக்கும் மும்பை சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றது. பிறகு ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இல்லை என்றது.
ஆனால் அமெரிக்காவின் கடும் மிரட்டல் மற்றும் ஆதாரங்களை அடுக்கியதைத் தொடர்ந்து அதை ஒத்துக் கொண்டது.
இதையடுத்து மசூத் அஸார், லக்வி ஆகியோரைக் கைது செய்தது. ஆனால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இப்போது கூறுகிறது.
இந்தியாவின் வலியை உணர்வதாக அதிபர் சர்தாரி உருக்கமாக கூறுகிறார். ஆனால் அடுத்த நாளே, கைது செய்த தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்கிறார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்.
பாகிஸ்தானுக்கு இன்னும் எத்தனை முகங்கள் இருக்கிறதோ தெரியவில்லை.
-
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications