Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போர் திணிக்கப்பட்டால் சந்திக்க தயாராம் பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

Shah Mehmood Qureshiwith Pranab
இஸ்லாமாபாத்: எங்கள் மீது போர் திணிக்கப்பட்டால் அதை சந்திக்க நாங்கள் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹமூது குரேஷி கூறியுள்ளார்.

இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள் போர் திணிக்கப்படுவதை
விரும்பவில்லை. ஆனால் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டால் அதை சந்திக்க முழு அளவில் தயாராக இருக்கிறோம்.

எங்களது தாயகத்தைக் காக்கும் கடமையும், பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. இதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் அன்பையும், நட்பையும் விரும்புகிறோம். இந்தப் பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவுவதை விரும்புகிறோம். ஆனால் அமைதியாகப் போக வேண்டும் என்ற எங்களது நோக்கத்தை பாகிஸ்தானின் பலவீனமாக யாரும் நினைத்து விடக் கூடாது.

யாரையும் ஒப்படைக்க மாட்டோம்:

மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய, எங்களது நாட்டைச் சேர்ந்த யாரையும், இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது. பாகிஸ்தானியர்கள் யாரேனும் மும்பை சம்பவத்தில் தொடர்பு கொண்டிரு்நதால், பாகிஸ்தான் நாட்டுச் சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும்.

எங்களது சுதந்திரமான விசாரணையின் அடிப்படையில்தான் தற்போதைய கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டாலும் கூட அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது.

கைது செய்யப்பட்ட எந்த பாகிஸ்தானியும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படமாட்டார்.

பாகிஸ்தான் மண்ணை யாரும் தீவிராத செயலுக்கு பயன்படுத்தக் கூடாது என்பதில் பாகிஸ்தான் அரசு உறுதியாக உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில்தான், எங்களது உளவு அமைப்பின் தகவல்களின் அடிப்படையில் சமீபத்திய கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் மீது பாகிஸ்தானிய சட்டப்படி விசாரணை நடைபெறும்.

மும்பை சம்பவத்தில் பாகிஸ்தான் அரசுக்கு எந்த வகையிலும் தொடர்பு கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். ஆனால் இந்தியா இதுவரை பதில் எதையும் தெரிவிக்காமல் உள்ளது என்றார் குரேஷி.

முதலில் இந்தியா கோரிய தீவிரவாதிகள் யாரும் பாகிஸ்தானில் இல்லை என்றது அந்நாட்டு அரசு. அடுத்து, பாகிஸ்தானியர்கள் யாருக்கும் மும்பை சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றது. பிறகு ஐ.எஸ்.ஐக்கு தொடர்பு இல்லை என்றது.

ஆனால் அமெரிக்காவின் கடும் மிரட்டல் மற்றும் ஆதாரங்களை அடுக்கியதைத் தொடர்ந்து அதை ஒத்துக் கொண்டது.

இதையடுத்து மசூத் அஸார், லக்வி ஆகியோரைக் கைது செய்தது. ஆனால் அவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று இப்போது கூறுகிறது.

இந்தியாவின் வலியை உணர்வதாக அதிபர் சர்தாரி உருக்கமாக கூறுகிறார். ஆனால் அடுத்த நாளே, கைது செய்த தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்கிறார் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்.

பாகிஸ்தானுக்கு இன்னும் எத்தனை முகங்கள் இருக்கிறதோ தெரியவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+