பிரிட்டன் துணை சபாநாயகரானார் ஸ்வராஜ் பால்

லார்ட்ஸ் சபையின் துணை சபாநாயகர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ள முதல் ஆசியர் என்ற பெருமையை இதன் மூலம் ஸ்வராஜ் பால் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அமைச்சரவையில் இதற்கு முன்பு பல இந்தியர்கள் அமைச்சர்களாக இருந்துள்ள போதிலும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் உயரிய பதவிக்கு ஒரு இந்தியர், அதுவும் ஆசிய நாட்டவர் வருவது இதுவே முதல் முறையாகும்.
இதுகுறித்து அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஸ்வராஜ் பால் கூறுகையில், நான் கெளரவிக்கப்பட்டுள்ளேன். இந்தியாவைச் சேர்ந்த ஒவ்வொரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் கிடைத்துள்ள கெளரவம் இது.
மகாத்மா காந்தியடிகளின் தாரக மந்திரமான ஸ்வராஜ் (சுதந்திரம்) என்பதைத்தான் எனது பெயராக எனது பெற்றோர்கள் வைத்தனர்.
இங்கிலாந்துக்கும், இங்கிலாந்தின் ஜனநாயகத்திற்கும் இந்த நியமனம் மூலம் பெருமை கிடைத்துள்ளது. எனது தாய்நாட்டுக்கும் மிகப் பெரிய கெளரவம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு சிறந்த சேவையாற்ற காத்திருக்கிறேன் என்றார் பால்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் லார்ட்ஸ் சபையை நடத்தும் பெருமை இதன் மூலம் பாலுக்குக் கிடைத்துள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு ஸ்வராஜ் பாலுக்கு லார்ட் பட்டம் வழங்கப்பட்டது. 1983ம் ஆண்டு இந்தியாவின் பத்ம பூஷன் விருது கிடைத்தது. 77 வயதாகும் ஸ்வராஜ் பால், இங்கிலாந்தில் வசித்து வரும் மிகப் பெரிய இந்திய வம்சவாளி தொழிலதிபர்களில் ஒருவராவார்.
கேபரோ என்ற பன்னாட்டு நிறுவனத்தை நிறுவியர். கேபரோ, இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீல் மற்றும் பொறியியல் குழுமம் ஆகும். இதன் வருடாந்திர வருமானம் 1.5 பில்லியன் பவுன்டுகள் ஆகும்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications