அத்வானி-இலங்கை தமிழ் எம்.பி சிவாஜிலிங்கம் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

அப்போது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்தும் அவர் அப்போது விவரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் சந்திக்கும் இன்னல்களை அத்வானியிடம் எடுத்துக் கூறினேன்.
அவற்றை அத்வானி கவனத்துடன் கேட்டுக் கொண்டார்.
இந்தப் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் அத்வானி பேசுவார் என்று நம்புகிறேன்.
இலங்கை ராணுவத்தால் அந்நாட்டில் கோயில்கள் இடிக்கப்பட்டு வருவது குறித்தும் அத்வானியிடம் எடுத்துரைத்தேன் என்றார் சிவாஜிலிங்கம்.












Click it and Unblock the Notifications