லோக்சபாவில் தகவல் தொழில்நுட்ப சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சைபர் குற்றங்கள், ஈ காமர்ஸ் மோசடிளைத் தடுக்க வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
தகவல் தொழில்நுட்ப திருத்த மசோதா 2006 என்று பெயரிடப்பட்ட இந்த மசோதாவில், மின்னணு ஊடகங்கள் மூலம் ஆபாசப் படங்களைப் பிரசுரிப்போர், ஆபாச வீடியோக்கள், நம்பிக்கை மோசடி, தகவல்களை திருடுவது, ஈ காமர்ஸ் மோசடி ஆகியவற்றைத் தடுக்கும் அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இதுபோன்ற குற்றங்கள் தொடர்பான விசாரணையில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய விதிமுறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
சைபர் குற்றங்களை விசாரிக்க தனி டிரிப்யூனல் அமைக்கவும் இந்த மசோதா வழி செய்கிறது. இந்த டிரிப்யூனலில் எத்தனை பேர் இடம் பெறுவார்கள் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்.
மேலும் மின்னணு ஆவணங்களில், மின்னணு கையொப்ப தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கவும் இந்த சட்டம் வகை செய்கிறது.












Click it and Unblock the Notifications