இந்தியாவில் பணவாட்டம்! – வங்கிகள் அலறல்

Subscribe to Oneindia Tamil

Money
மும்பை: இந்தியாவில் அடுத்த ஆண்டுமுதல் பணவாட்டம் எனப்படும் ஆபத்தான பொருளாதாரச் சூழல் வந்துவிடும் என வங்கிகள் எச்சரித்துள்ளன.

இந்த ஆண்டின் மத்தியில் கடுமையாக உயர்ந்திருந்த பணவீக்கம் இப்போது படிப்படியாக குறைந்து 6.61 சதவிகிதத்துக்கு வந்துள்ளது. மார்ச்சுக்குள் இது 3 சதவிகிதமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலை மேலும் நீடித்தால் 2009- மத்தியில் பணவீக்கம் இல்லாமல் போய் விடும் என்றும், அடுத்த நிதியாண்டில் பணவீக்கத்துக்கு எதிர்மறையான பணத்தேக்கம் ஏற்பட்டுவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

மக்களின் வாங்கும் சக்தி குறைந்து அனைத்துப் பொருள்களின் விலையும் அடிமட்டத்துக்கு வீழ்வதையே பணவாட்டம் அல்லது பணத்தேக்கம் (Deflation) என்கிறது பொருளியல்.

இந்த நிலையை சரியாக்க நாட்டின் பணப்புழக்கம் அதிகரிக்கப்பட வேண்டும், வட்டியில்லாக் கடன்களை மக்களுக்கு ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும்.

சிட்டி பேங்க், எச்டிஎப்சி, ஐடிபிஐ ஆகிய வங்கிகள் இதுகுறித்து எச்சரிக்கை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+