ஜெயலலிதாவின் சூறாவளி பிரச்சார திட்டம்
இடைத் தேர்தல் நடைபெறும் திருமங்கலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜனவரி 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை 4 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
6ம் தேதி திருமங்கலத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார். இக் கூட்டத்தில் அதிமுக தோழமை கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
3ம் தேதி பெருங்குடி, கைத்தறி நகர், நிலையூர், சம்பகுளம், வளையங்குளம், எலியார் பத்தி, பாரபத்தி, கூடக்கோவில், சின்ன உலகாணி உள்ளிட்ட 17 இடங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செயகிறார்.
4ம் தேதி புளியங்குளம், செக்காணூரணி, சிக்கம்பட்டி, அனுப்பப்பட்டி காலனி, கரடிக்கல், கீழ ஊரப்பனூர், பள்ளக்காபட்டி, மேல் உரப்பனூர் உள்ளிட்ட 12 இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.
5ம் தேதி சிவரக்கோட்டை, அகத்தாப்பட்டி, வாலாபுரம், வில்லூர், கள்ளிக்குடி, மேலப்பட்டி, வேப்பங்குளம், இலுப்பங்குளம் உள்ளிட்ட 12 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
6ம் தேதி திருமங்கலத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். இக்கூட்டத்தில் வைகோ, வரதராஜன், தா.பாண்டியன் உள்ளி்ட்ட அதிமுக தோழமை கட்சி தலைவர்களும் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.












Click it and Unblock the Notifications