ஆனையிறவு இன்னும் வீழவில்லை: 'ரா' பரப்பிய செய்தி?
கொழும்பு: ஆனையிறவு இன்னும் வீழாத நிலையில் அது வீழ்ந்து விட்டதாக இந்திய உளவு அமைப்பான ரா முன்கூட்டியே இந்திய ஊடகங்களுக்கு செய்தி பரப்பி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
கிளிநொச்சியைப் பிடித்து விட்ட ராணுவம், அடுத்து ஆனையிறவையும் பிடித்து விட்டதாக நேற்று செய்திகள் கூறின. இதையடுத்து அனைத்து இந்திய ஊடகங்களும் அந்த செய்தியை ஒளிபரப்பின, பிரசுரித்தன, ஒலிபரப்பின.
ஆனால் இந்தியாவின் ரா அமைப்புதான் இந்த செய்தியை பரப்பியதாகவும், உண்மையில் ஆனையிறவு நோக்கி ராணுவம் முன்னேறியபடிதான் உள்ளதாகவும், இன்னும் அது ஆனையிறவை பிடிக்கவில்லை என்றம் தகவல்கள் கூறுகின்றன.
இதை இலங்கை ராணுவமே விளக்கியுள்ளது. ஆனையிறவுக்கு இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் ராணுவம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவத் தரப்பில் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரிகேடியர் சாவேந்திர சில்வா தலைமையிலான 58வது படைப் பிரிவினர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டுள்ளனர். விரைவில் ஆனையிறவு வீழும்.
சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களில் ஆனையிறவைப் பிடிப்போம். ஆனையிறவை நெருங்க இன்னும் இரண்டரை கிலோமீட்டர் தொலைவுதான் உள்ளது என்றார்.
இதன் மூலம் ஆனையிறவு இன்னும் பிடிபடவில்ல என்பது தெளிவாகியுள்ளது.
இந்திய உளவு அமைப்பு பரப்பிய செய்தியால்தான் ஆனையிறவு வீழ்ந்து விட்டதாக நேற்று அனைத்து இந்திய ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications