பிரபாகரன் பிடிபட்டால் இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம்: இலங்கை

Subscribe to Oneindia Tamil

Prabhakaran
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடித்தால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

பிரபாகரனை உயிருடன் பிடிப்பதே ராணுவத்தின் குறிக்கோள் என இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். ஆனால் அவர் ராணுவத்திடம் சிக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் பாதுகாப்பு நிபுணர்கள்.

ந்த நிலையில் தற்போது பிரபாகரன் மறைந்திருப்பதாக கருதப்படும் முல்லைத்தீவை குறி வைத்து ராணுவம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

பிரபாகரன் ஒரு வேளை சிக்கினால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் வீரப்ப மொய்லி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என இலங்கை அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் உடனடியாக அவரை இந்தியாவிடம் ஒப்படைத்து விட மாட் டோம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக அவரை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றி இலங்கை அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. சர்வதேச விதி முறைகளுக்கு உட்பட்டே நாங்கள் செயல்படுவோம்.

ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரனை ஒப்படைக்கும் படி இந்தியா கோரிக்கை விடுத்தால் அது பற்றி இலங்கை அரசு பரிசீலிக்கும். ஆனாலும் சர்வதேச சட்ட திட்டங்களை நன்கு பரிசீலித்த பிறகே இலங்கை அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+