கணவரின் ஆணுறுப்பை தீவைத்துக் கொளுத்தி கொன்ற மனைவி!

Subscribe to Oneindia Tamil

மெல்போர்ன்: இந்தியாவைச் சேர்ந்த பெண்மணி, தனது கணவரின் ஆணுறுப்பில் தீவைத்தார். இதில் பரிதாபமாக அந்த கணவர் உயிரிழந்தார். போலீஸார் மனைவியைக் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில் பிறந்தவர் ரஜினி நாராயணன் (44). ஆஸ்திரேலியாவின் அடிலைட் நகரில் வசித்து வருகிறார். இவரது கணவர் சதீஷ் நாராயணன் (47).

அடிலைட் கிளீவ்லேன்ட் அவென்யூவில் ரஜினியின் வீடு உள்ளது. அது இரட்டை மாடிகளைக் கொண்ட வீடாகும்.

டிசம்பர் 8ம் தேதி இரவு சதீஷ் நாராயணன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரஜினி, ஸ்பிரிட்டை, நாராயணனின் ஆணுறுப்பின் மீது ஊற்றி தீ வைத்து விட்டார்.

இதில் அலறித் துடித்த நாராயணன், உடல் வெந்து துடித்தார். வீடும் தீயில் கருகியது. அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் தீ பரவியதில் சில வீடுகள் சேதமடைந்தன.

அக்கம் பக்கத்தினர் சதீஷ் நாராயணனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் நாராயணன்.

இந்த கொடூரக் கொலைக்கு காரணம் - கணவரின் நடத்தை குறித்து ரஜினிக்கு ஏற்பட்ட சந்தேகம். அக்கம் பக்கத்துப் பெண்களிடம் கணவருக்கு, தகாத உறவு இருப்பதாக சந்தேகப்பட்டார் ரஜினி. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மோதலும் மூண்டுள்ளது. இந்த நிலையில்தான் கணவரைக் கொன்று விட்டார் ரஜினி.

கணவரை கொடூரமாகக் கொன்ற பின்னர் அக்கம் பக்கத்தவர்களிடம், 'அது' இருந்ததால்தானே எனக்கு துரோகம் செய்கிறார். 'அதைக்' கொளுத்த நினைத்தேன், கொளுத்தி விட்டேன். 'அது' எனக்கு மட்டும்தான் சொந்தம். 'அதை' யாருக்கும் விட்டுத் தர மாட்டேன் என ஆக்ரோஷமாக கூறியுள்ளார் ரஜினி.

ரஜினி வைத்த தீயில், நாராயணன் உடல் கருகி உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் ரஜினியைக் கைது செய்தனர்.

போலீஸ் காவலில் கடந்த வெள்ளிக்கிழமை வரை அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு மன நல சோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+