பாக் மீது போர்: இல்லாவிட்டால்..சமாஜ்வாடி மிரட்டல்
டெல்லி: பாகிஸ்தான் மீது உடனடியாக போர் தொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட பாகிஸ்தான் குறித்து மத்திய அரசு மென்மையான போக்கைக் கையாண்டால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும் என சமாஜ்வாடிக் கட்சி எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களிடையே கருத்து நிலவுகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகளை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்காவிட்டால், காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் கடும் நடவடிக்கை எடுத்து வருவதைப் போல இந்தியாவும் தாக்குதல் நடத்தும் என ஏன் அமெரிக்கா, பாகிஸ்தானை எச்சரிக்கக் கூடாது.
பாகிஸ்தான் மீது இந்தியா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் தொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிப்போம் என்றார் அமர்சிங்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு கை கொடுத்த கட்சி சமாஜ்வாடி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது இப்படி ஒரு மிரட்டலை அது விடுத்துள்ளதால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications