ஜனவரி 30ம் தேதி சட்டசபை கூட்டத் தொடர்
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் ஜனவரி 30ம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் ஆவுடையப்பன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆளுநர் உரைக்குப் பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டு, சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், நாளை (இன்று) முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெறும். அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது 23ம் தேதி விவாதம் தொடங்கும். பின்னர் வார இறுதி நாள் மற்றும் குடியரசு தின விடுமுறைகளைத் தொடர்ந்து 27ம் தேதி மீண்டும் சபை கூடும்.
நான்கு நாள் விவாதத்திற்குப் பின்னர் 30ம் தேதி முதல்வர் கருணாநிதி விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுவார். பின்னர் நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்படும்.
பட்ஜெட் கூட்டத் தொடருக்காக பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் சபை மீண்டும் கூட்டப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications