என்எஸ்ஜிக்கு ரூ. 20 கோடி நலநிதி - பிரதமர் ஒப்புதல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: என்எஸ்ஜி கமாண்டோ படையினருக்கு 20 கோடி ரூபாய் நலநிதி வழங்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் என்எஸ்ஜி கமாணடோ பிரிவினர் ஆற்றிய பங்கு மறக்க முடியாதது. இச்சம்பவத்தில் சில கமாண்டோக்கள் உயிரிழந்தனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் தற்போது பணியில் இருப்பவர்களுக்கான நலநிதி தொகை கேட்டு என்எஸ்ஜி, பிரதமர் அலுவலகத்துக்கு விண்ணப்பம் செய்திருந்த்து.
இதையடுத்து தேசிய பாதுகாப்பு நிதியில் இருந்து அவர்களுக்கு 20 கோடி ரூபாய் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இத்தொகை என்எஸ்ஜியின் வைப்பு கணக்கில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications