நேற்று ஒரே நாளில் 80,000 பேருக்கு வேலை பறிப்பு

ஒரே நாளில் இத்தனை பேருக்கு வேலை போயிருப்பது உலக தொழில் துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொருளாதார நெருக்கடி படு மோசமாகி வருவதையே இது காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகின் முன்னணி நிறுவனங்களான கட்டுமானப் பொருள் உற்பத்தி நிறுவனமான கேட்டர்பில்லர், பார்மசூட்டிக்கல் நிறுவனமான பிஸர், தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்பிரின்ட் நெக்ஸ்டெல் கார்ப் மற்றும் ரீடெய்ல் நிறுவனமான ஹோம் டிப்போ ஆகிய நிறுவனங்களில் மட்டும் 61 ஆயிரம் பேர் நேற்று வேலை இழந்துள்ளனர்.
இந்த நிறுவனம், அந்த நிறுவனம் என்று இல்லாமல், அத்தனை தொழில் நிறுவனங்களையும் பொருளாதார நெருக்கடி பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
டச்சு நாட்டைச் சேர்ந்த ஐஎன்ஜி நிறுவனம் 7000 பேரை வேலையை விட்டு அனுப்பப் போவதாக கூறியுள்ளது. இன்னொரு டச்சு நிறுவனமான பிலிப்ஸ், 6000 பேரை வேலையை விட்டு அனுப்பியுள்ளது.
இங்கிலாந்தின் கோரஸ் நிறுவனம் 3500 பேரை வேலையை விட்டு அனுப்பப் போவதாக கூறியுள்ளது.
சில நிறுவனங்கள் ஆட்குறைப்புக்குப் பதில் வேறு சில நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. சம்பளக் குறைப்பு, சம்பள நிறுத்தி வைப்பு, சலுகைகள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை அவை மேற்கொண்டுள்ளன. சில நிறுவனங்கள் வேலை நேரத்தைக் குறைத்துள்ளன.












Click it and Unblock the Notifications