For Daily Alerts
Just In
டிரைடன்ட் ஹோட்டலின் 16வது மாடியிலிருந்து குதித்து ரஷ்யர் தற்கொலை
மும்பை: மும்பையில் உள்ள டிரைடன்ட் ஹோட்டலில் இன்று ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒருவர் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான டிரைடன்ட் ஹோட்டல் சமீபத்தில்தான திறக்கப்பட்டது.
பல மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலின் 16வது தளத்திலிருந்து இன்று அதிகாலை 2 மணியளவில் அலெக்சாண்ட்ர என்ற ரஷ்ய நாட்டவர் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் ஹோட்டலின் நீச்சல்குளப் பகுதியில் காணப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் இது தற்கொலையாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Monday, February 2, 2009, 11:44 [IST]