பிரதமருக்கு தையல் பிரிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேற்று தையல் பிரிக்கப்பட்டு விட்டது. தற்போது அவர் நல்ல நலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இருதய பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
அவருக்கு நேற்று தையல் பிரிக்கப்பட்டது. இதன் மூலம் அறுவைச் சிகிச்சை நடைமுறைகள் முழுமையாக முடிந்துவிட்டன. பிரதமரின் உடல் நலம் திருப்திகரமாகவும், ஸ்திரமாக இருப்பதாகவும் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications