Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீர்காழ் காங்., பிரமுகர் ரவிச்சந்திரன் உடல் தகனம்

Subscribe to Oneindia Tamil

சீர்காழி: ஈழத்தமிழர்களை காப்பாற்ற கோரி தீக்குளித்த சீர்காழி காங்கிரஸ் பிரமுகர் ரவிச்சந்திரனின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.

சீர்காழியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் 17வது வார்டு இணை செயலராக இருந்தவர் ரவிச்சந்திரன். கடந்த 6ம் தேதி இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என கூறி தீக்குளித்தார். மறுநாள் மருத்தவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது உடலை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் ஊர்வலமாக அவரது வீட்டுக்கு எடுத்து சென்றனர். நேற்று காலை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரது வீ்ட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னார். பின்னர் ரவிசந்திரனின் உடலுக்கு தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், பாமக நிறுவனர் ராமதாஸ், வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளர் பழனிசாமி, தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் சுப இளவரசன், பாஜக நிர்வாகி வைத்திலிங்கம், வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து இரங்கல் கூட்டம் நடந்தது. அதை தொடர்ந்து ரவிச்சந்திரனின் இறுதி ஊர்வலம் நடைபெற்று, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+