For Daily Alerts
Just In
வருமான வரி அதிகாரிகள் ராஜுவிடம் விசாரணை
இந்த விசாரணைக்கென டெல்லியிலிருந்து சிறப்பு விசாரணைக் குழு ஹைதராபாத் வந்தது. பின்னர் ராஜு சகோதரர்கள் அடைக்கப்பட்டுள்ள சஞ்சலகுடா சிறைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், தங்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.
4 சீனியர் அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு, ராஜு செய்த மோசடிகள், அதன் பின்னணி குறித்து 'துருவித் துருவி' விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே ராஜு சகோதரர்களிடன் செபி அமைப்பின் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளது.
இந்த நிலையில் ராஜு செய்துள்ள பல மோசடிகள் இந்திய வருமான வரித்துறையை பெருமளவில் பாதித்திருப்பதை உணர்ந்து இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை நடந்த விசாரணையில் உருப்படியாக எந்தத் தகவல்களையுமே செபி மற்றும் கம்பெனிகள் விவகார அமைச்சகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, February 21, 2009, 16:02 [IST]