For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருமான வரி அதிகாரிகள் ராஜுவிடம் விசாரணை

By Sridhar L
Google Oneindia Tamil News

Ramlinga Raju
ஹைதராபாத்: ரூ.7800 கோடி மோசடி செய்து, சத்யம் நிறுவனத்தையும், இந்திய ஐடி துறையையும் ஆட்டம்காண வைத்த 'பெருமைக்குரிய' ராமலிங்க ராஜு மற்றும் அவர் தம்பி ராமராஜுவிடம் இன்று விசாரணையைத் துவங்கியது வருமான வரித்துறை.

இந்த விசாரணைக்கென டெல்லியிலிருந்து சிறப்பு விசாரணைக் குழு ஹைதராபாத் வந்தது. பின்னர் ராஜு சகோதரர்கள் அடைக்கப்பட்டுள்ள சஞ்சலகுடா சிறைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், தங்கள் விசாரணையை ஆரம்பித்தனர்.

4 சீனியர் அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு, ராஜு செய்த மோசடிகள், அதன் பின்னணி குறித்து 'துருவித் துருவி' விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே ராஜு சகோதரர்களிடன் செபி அமைப்பின் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்திவிட்டுச் சென்றுள்ளது.

இந்த நிலையில் ராஜு செய்துள்ள பல மோசடிகள் இந்திய வருமான வரித்துறையை பெருமளவில் பாதித்திருப்பதை உணர்ந்து இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை நடந்த விசாரணையில் உருப்படியாக எந்தத் தகவல்களையுமே செபி மற்றும் கம்பெனிகள் விவகார அமைச்சகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X