For Daily Alerts
Just In
ஆந்திர சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் போட்டியிடுகிறார் சிரஞ்சீவி
ஹைதராபாத்: ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் தான் 3 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வருகிற சட்டசபை தேர்தலில் நான் முதலில் 1 அல்லது 2 இடத்தில் போட்டியிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் தெலுங்கானா,ராயலமா, வடக்கு ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளில் நான் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அவர்களது கோரிக்கையை ஏற்று நான் 3 இடத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
ராயலசீமா பகுதியில் திருப்பதி, தெலுங்கானாவில் சேரியாலாவிலும், 3-வதாக கிழக்கு கோதாவரி அல்லது மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியிலும் போட்டியிடுவேன் என்றார் சிரஞ்சீவி.
Comments
இந்தியா அரசியல் சட்டசபை போட்டி andhra chiranjeevi ஆந்திரா சிரஞ்சீவி praja rajyam constituencies பிரஜா ராஜ்ஜியம் தொகுதிகள்
Story first published: Sunday, February 22, 2009, 12:24 [IST]