ஆந்திர சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் போட்டியிடுகிறார் சிரஞ்சீவி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் தான் 3 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
வருகிற சட்டசபை தேர்தலில் நான் முதலில் 1 அல்லது 2 இடத்தில் போட்டியிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் தெலுங்கானா,ராயலமா, வடக்கு ஆந்திரா ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதிகளில் நான் கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அவர்களது கோரிக்கையை ஏற்று நான் 3 இடத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.
ராயலசீமா பகுதியில் திருப்பதி, தெலுங்கானாவில் சேரியாலாவிலும், 3-வதாக கிழக்கு கோதாவரி அல்லது மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியிலும் போட்டியிடுவேன் என்றார் சிரஞ்சீவி.












Click it and Unblock the Notifications