தாய் திட்டியதால் மனம் உடைந்த மகன் தீக்குளித்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

நீடாமங்கலம்: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே தாய் திட்டியதால் இளைஞர் தீ குளித்தார். சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீடாமங்கமலம் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் கார்த்திக் ராஜா(22). பிளஸ் டூவில் தோல்வி அடைந்த இவர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவருக்கு அடிக்கடி அறிவுரை கூறியுள்ளனர். இதில் மனம் உடைந்த கார்த்திக் ராஜா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்க சேர்த்தனர்.

காயத்தின் தன்மை அதிகமிருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+