மும்பை தாக்குதல்: 2 இந்தியர்களுக்கு முக்கியத் தொடர்பு
மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாஹிம் இப்ராகிம் மற்றும் சபாபுதீன் ஆகிய இரு இந்தியர்களுக்கு முக்கியத் தொடர்பு இருப்பதாக மும்பை போலீஸார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு மும்பை குறித்த முக்கிய தகவல்களும், அதன் துல்லியமான வரைபடம் ஒன்றையும் தந்து சதி செயலுக்கு இவர்கள் துணை புரிந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கோர சம்பவம் உலகையே குலுக்கியது.
இது தொடர்பான 11,280 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று மும்பை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பாஹிம், சபாபுதீன் ஆகிய இந்தியர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இவர்கள் இருவரும் மும்பை தாக்குதலுக்கு முன்னதாக மும்பை நகர் குறித்து முக்கிய தகவல்களை திரட்டியுள்ளனர்.
அவர்களில் பாஹிம், மும்பை நகரின் முக்கிய பகுதிகளின் வரைபடம் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்கள் குறித்து அங்குலம் அங்குலமாக தகவல் தந்துள்ளான். அதை வாங்கிய சபாபுதீன் பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் முகாமுக்கு அனுப்பியுள்ளான்.
சபாபுதீனுக்கும் இந்த தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியும், லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவருமான ஜகிர்-உர்-ரஹ்மான் லக்வி மற்றும் அபு ஹாபாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
இவர்கள் இருவரும் கடந்த 2007ல் சிஆர்பிஎப் முகாம் ஒன்றை தாக்கிய விவகாரத்தில் உபி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். தற்போது அவர்கள் மீது இந்த வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றப்பத்திரிகையில்,
தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக, கசாப் உள்ளி்ட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஹாபா, சபாபுத்தின் அனுப்பிய வரைபடங்களை காண்பித்து பயிற்சி தந்துள்ளார்.
பயிற்சியின் முடிவில் ஹாபா வரைபடங்களில் இருந்து குறுக்கு கேள்வி கேட்டு அவர்கள் தீவிரவாத செயலுக்கு தயாராகி வருகின்றனரா என்பதை தெரிந்து கொண்டுள்ளார். இதை பஹிமும், சபாபுத்தினும் பிரத்யோகமாக தயாரித்து கொடுத்ததாக கசாப் உள்ளிட்டோர்களிடம் தெரிவித்துள்ளார் என்கிறது குற்றப்பத்திரிகை.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications