திமுக வக்கீல்களுக்கு கருணாநிதி புது உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: உச்சநீதிமன்றத்தில் வெளியாகும் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்பலாம் என்று திமுக வக்கீல்களுக்கு முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல்-அமைச்சர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து என்னிடம் தொடர்பு கொண்டு கீழ்கண்ட அறிவுரை வழங்கியுள்ளார்.

மார்ச் 2-ந்தேதி (திங்கட்கிழமை) வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லவேண்டும் என்று ஏற்கனவே தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியின் சார்பில் விடப்பட்ட அழைப்பினை, உச்ச நீதிமன்றத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கு வருகிற 3-ந் தேதி அன்று விசாரணைக்கு வருவதால் அதன்பின் வழக்கறிஞர்கள் நீதி மன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

எனவே வழக்கறிஞர்களிடையே சுமூக நிலை ஏற்பட உதவிடும் வகையில் வழக்கறிஞர்கள் திங்கட்கிழமை நீதிமன்றம் செல்வதை தவிர்த்து உச்ச நீதிமன்ற முடிவுக்கு ஏற்ப வழக்கறிஞர்கள் நீதி மன்றம் செல்லலாம் என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் சமீபத்தில் திமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவி்த்தார் என்பது நினைவிருக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+