சிங்கப்பூரில் காஸ் கசிவு-தீயில் கருகி 3 இந்தியர்கள் பலி
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட காஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டுவாஸ் என்ற இடத்தில் உள்ள கெமிக் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை இரவு நைட்ரிக் அமில வாயு கசிந்தது. இதனால் அங்கு தீவிபத்து ஏற்பட்டது.
இதில் சிக்கி 2 இந்தியத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காயமடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உயிரிழந்த மூன்று இந்தியர்கள் விவரம் தெரியவரவில்லை. அவர்களுக்கு திருமணமாகி விட்டது என்றும், மனைவி, குழந்தைகள் இந்தியாவில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இறந்த மூன்று பேருக்கும் வயது 35க்குள்தான் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் பல்வேறு தொழில்நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் கட்டுமான நிறுவனங்கள், கடல் சார் பொறியியல் பிரிவுகளில் இவர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications