ரூ.150..பிறந்த நாளில் நண்பனை கொன்ற சிறுவன்
விருதுநகர்: விருதுநகர் அருகே ரூ. 150 தர மறுத்த தனது நண்பனை, அவனது பிறந்த நாளன்று கொடூரமாகக் கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
விருதுநகர் அருகே உள்ள பி.குமாரலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். டாஸ்மாக் ஊழியர். இவரது மனைவி குருவம்மாள், தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த தம்பதியின் ஒரே மகன் சதீஷ்குமார் (14). 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சதீஷ் குமாருக்குப் பிறந்த நாள். இதையடுத்து பள்ளியில் படிக்கும் தனது நண்பர்களுக்கும், சக மாணவர்களுக்கம் இனிப்புகளை கொடுத்தான் சதீஷ் குமார்.
மதியம் பள்ளி சத்துணவை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு சென்றான். வீட்டில் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டதால் தனியாக இருந்த சதீஷ் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
இந்த நிலையில் ராஜேந்திரனின் உறவினர் ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வந்துள்ளார். அவருக்கு அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மாணவன் சதீஷ்குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்த காட்சியைப் பார்த்துப் பதறிப் போனார்.
கத்தியால் குத்தி சதீஷ் குமார் கொலை செய்யப்பட்டிருந்தான். இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். சதீஷ் குமார் படித்த பள்ளிக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது சதீஷ்குமாருடன் படித்து வரும் சந்திவீரன் என்ற மாணவனது சட்டையில் ரத்தக்கறை இருப்பதைப் பார்த்து போலீஸார் அவனைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையின்போது தான் சதீஷ் குமார் வீட்டுக்குப் போனதாகவும், அங்கு சதீஷ் பிணமாக கிடந்ததாகவும், இதையடுத்து ஓடி வந்து விட்டதாகவும் கூறியுள்ளான் சந்தி வீரன். ஆனால் போலீஸாருக்கு சந்தேகம் வலுக்கவே தீவிரமாக விசாரித்தனர்.
இதில் தான்தான் சதீஷ்குமாரை கொன்றதாக ஒப்புக் கொண்டான் சந்தி வீரன்.
இதுகுறித்து சந்தி வீரன் அளித்த வாக்குமூலத்தில்,
கடந்த மாதம் எனக்கு சொந்தமான வாக்மேனை ரூ.300-க்கு சதீஷ்குமாரிடம் விற்றேன். பாதி பணத்தை மட்டுமே தந்தான். மீதி பணம் ரூ.150-ஐ வாங்குவதற்காக அவனது வீட்டுக்கு சென்றேன்.
பணத்தை கேட்டபோது சதீஷ்குமார் தர மறுத்தான். இதனால் ஆத்திரம் அடைந்த நான் இரும்புக் கம்பியால் அவனை சரமாரியாக அடித்தேன். பின்னர் அங்கிருந்த அரிவாள் மனையால் வெட்டினேன். இதில் அவன் இறந்து விட்டான் என்று கூறியுள்ளான்.
போலீஸார் சந்தி வீரனைக் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மதுரையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியின் அவனை அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications