தேர்தல் விதிமீறல்-அமைச்சர் நேருவுக்கு நோட்டீஸ்
திருச்சி: திருச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியாதக கூறி தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என். நேருவுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து திருச்சி லோக்சபா தேர்தல் அதிகாரியும், திருச்சி மாவட்ட கலெக்டருமான சவுண்டையா செய்தியாளர்களிடம் கூறியதாவது
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டது குறித்து புகார் மனு வந்துள்ளது. அதன் அடிப்டையில் குறிப்பிட்ட தேர்தல் அலுவலர் மற்றும் போலீஸ் துறையினரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
யார் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதோ அவர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது என்றார்.
திருச்சி தொகுதிக்கு உட்பட்ட திருவரங்கத்தில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னி்ட்டு பயனாளிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications