''அத்வானி பிரதமரானால் மாயாவதி துணை பிரதமர்''!
லக்னெள: மாயாவதி, அத்வானியின் மறுபக்கத்தை போன்றவர். இவர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. அத்வானி பிரதமர் பதவிக்கு வந்தால் மாயாவதி துணைப் பிரதமராக செயல்படுவார் என சமாஜவாதி கட்சித் பொது செயலாளர் அமர் சிங் தெரிவித்துள்ளார்.
லக்னெளவில் நேற்று நடந்த கட்சி கூட்டத்தில் அமர் சிங் பேசுகையில்,
பாரதிய ஜனதாவின் மறுபக்கம் தான் பகுஜன் சமாஜ் கட்சி. இவர்களுக்கு இருவருக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் பாஜக குத்தப்படுவதாக தான் இருக்கும். இரண்டு கட்சிக்கிடையேயும் ரகசிய ஒப்பந்தம் அமலில் இருக்கிறது.
உபியில் இதற்கு முன் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றார் மாயாவதி. மூன்று முறையுமே பாரதிய ஜனதாவின் உதவியால்தான் அவர் முதல்வர் ஆனார். பாரதிய ஜனதாவின் லால்ஜி டாண்டனைத்தான் மாயாவதி அண்ணனாகக் கருதுகிறார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். எனவே அவர்கள் போட்டியாளர்கள் என்று கருதி ஏமாந்துவிட வேண்டாம்.
யானையும் தாமரையும் தனித்தனி சின்னங்கள் அல்ல. அவை இரண்டுமே நமக்கு எதிரானவை என்பதைத் தொண்டர்கள் மறந்துவிடக் கூடாது.
மாயாவதி மூன்றாவது அணியை ஆதரித்து அவர்கள் உதவியுடன் பிரதமராகி விட முடியும் என கனவு காண்கிறார். கட்சித் தொண்டர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதற்கே பணம் வாங்கியவர் மாயாவதி. அவர் அரசியலை ஒரு வியாபாரம் கருதுவதால் அவரது கனவு பலிக்காது என்றார் அமர்சிங்.












Click it and Unblock the Notifications