மேகலாயாவில் ஜனாதிபதி ஆட்சிக்குப் பரிந்துரை
டெல்லி: மேகலாயா அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையி்ல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாநில ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது.
நேற்றுதான் மேகலாயா சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான மேகாலயா முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.
ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நான்கு சட்டசபை உறுப்பினர்களின் வாக்குகளை செல்லாது என்று சபாநாயகர் லனோங் அறிவித்தார். அரசுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வாக்குகள் விழுந்த நிலையில் அரசுக்கு ஆதரவாக தனது வாக்கை செலுத்தி ஆட்சியைக் காப்பாற்றினார் சபாநாயகர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பி்ல மேகாலயா அரசு வெற்றி பெற்றது.
இது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. இதனால் மேகாலயா அரசியலில் பெரும் குழப்ப நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்யலாம் என்று பரிந்துரைத்து மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதினார் மாநில ஆளுநர் மூசாரே.
இதையடுத்து இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூடியது. மேகலாயாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைப்பது என அப்போது முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், மேகாலயா சட்டசபையில் நடந்தது குறித்து ஆளுநர் விரிவாக விளக்கி கடிதம் அனுப்பியுள்ளார். அங்கு அரசியல் சட்டம் சீர்குலைந்து விட்டதாகவும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறும் கோரியிருந்தார்.
இதை ஏற்று சட்டசபையை முடக்கி வைக்கவும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது என்றார் சிதம்பரம்.
இதையடுத்து இன்றைக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகனடப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications