நெல்லையில் பதட்டமான வாக்குச் சாவடிகள்-பாதுகாப்பு
நெல்லை: நெல்லையில் பதட்டமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி என இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2,308 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கலெக்டர் பழனியாண்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில்,
நெல்லை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளின் நிலை, அங்குள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார், உதவி தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலில் மைக்ரோ அப்சர்வர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை அரசு பொறியியல் கல்லூரியிலும், தென்காசி தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும் நடைபெறும்.
ஓட்டுபதிவு, ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றை அமைதியான முறையில் நடத்தி முடிக்க வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றார் கலெக்டர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications