நெல்லையில் பதட்டமான வாக்குச் சாவடிகள்-பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் பதட்டமான வாக்குச் சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி என இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் 2,308 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கலெக்டர் பழனியாண்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில்,

நெல்லை மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளின் நிலை, அங்குள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார், உதவி தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தலில் மைக்ரோ அப்சர்வர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை அரசு பொறியியல் கல்லூரியிலும், தென்காசி தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும் நடைபெறும்.

ஓட்டுபதிவு, ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றை அமைதியான முறையில் நடத்தி முடிக்க வேண்டும். பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறிந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றார் கலெக்டர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+