வன்னி-தமிழர்களை வெளியேற்ற ரெட்கிராஸ் எதிர்ப்பு
டெல்லி: வன்னிப் பகுதியிலிருந்து தமிழர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்ப்பதாக இலங்கைக்கான செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் பால் காஸ்டெல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து என்டிடிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டி..
நான் 2008ம் ஆண்டு கொழும்பு சென்று தலைமைப் பொறுப்பை ஏற்றேன். மனிதாபிமான நெருக்கடியை சரி செய்வதே எனது முக்கிய வேலையாக இருந்தது. போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களைக் காப்பாற்றுவது மிகப் பெரிய வேலையாக இருந்தது. 2வது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி அப்பாவி மக்களின் மருத்துவம் மற்றும் சுகாதாரத் தேவைகள் பாதிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அங்கு போதிய அளவில் சுகாதார வசதிகள், உணவு போன்றவை கிடைக்காத நிலை உள்ளது.
தற்போது அங்குள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தாக்குதலில் சிக்கி ஏராளமான அப்பாவிகள் காயமடைந்து வருகின்றனர். பெருமளவில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இரு தரப்பும் அப்பாவி மக்களின் நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் போரிட்டு வருகின்றன.
தற்போது வனப்பகுதியில் சிக்கியுள்ள மக்கள் பெரும் உயிரிழப்பை சந்திக்கும் அபாயத்தில் உள்ளனர்.
அரசு அமைத்துள்ள தற்காலிக அகதிகள் முகாம்களில் ஏராளமான பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் வசதிகள் செய்து தரப்படுகின்றன. நிலைமை போகப் போக மேம்படும் என நம்புகிறோம்.
இதுவரை புலிகளின் பகுதிகளிலிருந்து 35 ஆயிரம் பேர் வரை அரசுத் தரப்பு பகுதிகளுக்கு வந்திருப்பதாக கருதுகிறோம்.
தமிழ் மக்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றும் முடிவை இலங்கை அரசு எடுத்திருப்பதாக அறிகிறோம். ஆனால் அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எதிர்க்கிறது. அப்படிப்பட்ட முயற்சிகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம்.
போர் நடந்து வரும் பகுதிகளுக்கு செல்ல எங்களுக்கு அனுமதி கிடைக்கிறது. இருப்பினும் அப்பகுதிகளில் மருத்துவ வசதி மிகவும் மோசமாக உள்ளது. முறையான மருத்துவமனைகள் இல்லை. காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதிகள் இல்லை, மரு்நதுகள் இல்லை. இதனாலும் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.
விடுதலைப் புலிகள் இடைவிடாமல் அரசுப் படையினரோடு மோதி வருவதால் நிலைமை மேலும் மோசமடையும் என கருதுகிறோம் என்றார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications