5 வயது சிறுமியிடம் சில்மிஷம்-2 வாலிபர்கள் கைது
திருவாரூர்: திருவாரூர் அருகே 5 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் அருகே உள்ள கூத்தாநல்லூர் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் மகிஷா தேவி(5). இவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்வீட்டில் இருந்த மகாராஜன் (23) என்ற வாலிபர் சிறுமி மகிஷா தேவியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சில்மிஷம் செய்துள்ளார். மேலும் அவரது நண்பர் தமிழ்ராஜ் (25) என்பவரும் அந்த சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். சிறுமியின் தந்தை அங்கு ஓடிப் பார்த்த து அதிர்ச்சி அடைந்து அவர்களிடம் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகாரஜனும், தமிழ்ராஜூம், ராமமூர்த்தியை தாக்கினர்.
படுகாயமடைந்த அவர் கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மகிஷாதேவியை சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் சில்மிஷத்தில் ஈடுபட்ட மகாராஜன் (23), தமிழ்ராஜ் (25) ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.