பங்குச் சந்தை: 'காளை பாய்ச்சலால்' ரூ.91000 கோடி லாபம்!
Subscribe to Oneindia Tamil

மும்பை பங்குச் சந்தையில் கரடியின் பிடி குறைந்து, காளையின் துள்ளல் அதிகரித்ததால், நஷ்டத்தில் பரிமாறப்பட்ட பல பங்குகள் நல்ல லாபம் பார்த்தன. குறிப்பாக ரிலையன்ஸின் பங்குகள் கடந்த இரு வாரங்களாக நிலையான அளவு உயர்ந்துள்ளன. 16 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது இந்நிறுவனப் பங்குகள்.
இதனால் போன வாரம் வரை ரூ 2,10,661 கோடியாக இருந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்துக்கள் மதிப்பு, இப்போது ரூ. 2,43,624 கோடிகளாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ.32,963 கோடி ரூபாய் மதிப்பு கூடியுள்ளது.
பங்குகள் மதிப்பு அதிகம் உயர்ந்துள்ள இந்த டாப் 10 நிறுவனங்களில் ஓஎன்ஜிசி, என்டிபிசி உள்ளிட்ட 6 பொதுத்துறை நிறுவனங்களும் அடங்கும்.
போனவாரம் ரூ.1,50,109 கோடியாக இருந்த ஓஎன்ஜிசி மதிப்பு, இந்த வாரம் 1,72,821 கோடியாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications