ஒரு சீட் கூட தராவிட்டால் அது என்ன கூட்டணி - கார்த்திக் டென்ஷன்
திருப்பூர்: என்னை கூட்டணிக்குள் இழுக்க பேரம் பேசினார்கள். ஆனால் சீட் தர மாட்டோம். ஆதரவு தாருங்கள் என்றார்கள். ஒரு சீட் கூட தராவிட்டால் எப்படி அது கூட்டணியாகும் என்று கோபமாக கேட்டுள்ளார் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக்.
நடிகர் கார்த்திக்கின் நிலை என்ன என்று அவருக்கே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பாஜக மட்டுமே அவருடன் கூட்டணி குறித்து பேசி வருவதாக தெரிகிறது. வேறு யாரும் கூப்பிட்டதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் தன்னை கூட்டணிக்கு அழைத்ததாகவும், ஆனால் சீட் தர மாட்டோம், ஆதரவு மட்டும் தாருங்கள் என்று கேட்டதாகவும் கூறியுள்ளார் கார்த்திக்.
திருப்பூரில் நடந்த அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கார்த்திக் பேசுகையில், மக்களுக்கு தேவையானது நீதி, நேர்மை, கட்டுப்பாடு ஆகியவைதான். இதை செய்பவர்களுக்குதான் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
ஆட்சி, அதிகாரம் என்பது மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.
தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்தாலும் மக்களின் தேவை தீர்க்கப்படாமல் உள்ளது. கோடிக்கணக்கில் அன்னிய செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூரில் குறைந்த அளவு செலவிட்டாலே பிரச்சினைகளை தீர்த்து விடலாம். ஆனால் அதையும்கூட ஆட்சியில் இருப்பவர்கள் செய்வதில்லை.
செய்த கடமைகளை சாதனை பட்டியலாக தெரிவித்து மக்களை ஏமாற்றுவதை நிறுத்த வேண்டும். அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் பணத்தில் 3ல் ஒரு பங்கை செலவிட்டாலே வறுமை ஒழியும். கட்சிகள் ஒரு கூட்டணியில் இருந்து மற்றொரு கூட்டணியில் இணைவதன் உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
லஞ்சம் மற்றும் கமிஷனுக்கு பெரும் பகுதி சென்று விடுவதால் திட்டப்பணிகள் தரமானதாக இல்லை. இந்த உண்மைகளை எல்லாம் நான் வெளியே தெரிவித்துவிடுவேன் என்பதால் என்னை யாரும் கூட்டணியில் சேர்க்க பயப்படுகிறார்கள்.
என்னை யாரும் கூட்டணியில் சேர்க்காவிட்டாலும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பதை பின்னர் அறிவிப்பேன்.
கூட்டணி குறித்து என்னிடம் பேசினார்கள். ஆதரவு தெரிவித்து மட்டும் பேசுமாறு கூறினார்கள். சீட் தர மாட்டேன் என்று கூறி, என்னிடம் பேரம் பேசினார்கள். ஒரு சீட் கூட தராவிட்டால் அது எப்படி கூட்டணியாகும்.
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் தேர்தலில் போட்டியிடுவது உறுதி. அது எந்த தொகுதி என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றார் கார்த்திக்.
-
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications