நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்யக் கோரி மனைவி வழக்கு
சென்னை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தனது கணவர் நாஞ்சில் சம்பத்தை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி சசிகலா சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் திருப்பூரில் நடந்த மதிமுக கூட்டத்தில் பேசுகையில், இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக கூறி போலீஸார் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்தனர்.
இந்த நிலையில் சம்பத்தை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி சசிகலா சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், தேசத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் மட்டுமே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என அச்சட்டத்தின் விதி கூறுகிறது.
ஆனால் அரசு இந்த விதியை மீறி எனது கணவரைக் கைது செய்துள்ளது. எனவே இந்தக் கைது நடவடிக்கையை ரத்து செய்து எனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என சசிகலா சம்பத் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் தர்மாராவ், சுப்பையா முன்பு நாளை விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications