Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் மிதக்கும் காவல் நிலையம்

Subscribe to Oneindia Tamil

Floating Police Station
சென்னை: சென்னை துறைமுக போலீஸ் நிலையத்துக்கு தமிழக அரசு அதிவிரைவு ரோந்து படகு ஒன்றை வழங்கியுள்ளது.

சென்னையில் இருக்கும் 84 காவல் நிலையங்களுக்கு தமிழக அரசு தலா ஒரு ஹூன்டாய் அசன்ட் வாகனத்தை வழங்கியுள்ளது.
இதை தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் இருக்கும் பி6 காவல் நிலையத்துக்கு அதிவிரைவு ரோந்து படகு ஒன்றை தமிழக அரசு அர்ப்பணித்துள்ளது.

தென்னிந்தியாவில் அதிவிரைவு ரோந்து படகு வைத்திருக்கும் காவல் நிலையம் என்ற பெருமையை இந்த காவல் நிலையம் பெற்றுள்ளது.

இந்த ரோந்து படகில் இருந்து வடகே எண்ணூரில் இருந்து தெற்கே திருவான்மீயூர் வரை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

இந்த படகில் 27 போலீசார் மூன்று ஷிப்ட்களில் பணிபுரிவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எப்போதும் குறைந்தபட்சம் 9 போலீசாராவது இருப்பார்கள் என்பதால் இது மிதக்கும் காவல் நிலையம் என அழைக்கப்படுகிறது.

தனியாருக்கு சொந்தமான இந்த ரோந்து படகை, சென்னை துறைமுக டிரஸ்ட் ஒரு நாளுக்கு ரூ. 26 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்துள்ளது. 310 பிஎச்பி திறன் கொண்ட இந்த படகு மணிக்கு 16 முதல் 18 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது.

12 பேர் பயன்படுத்தக் கூடிய இந்த படகில் 6 பேர் தூங்கும் வசதியும் உள்ளது. இதை தவிர ஜிபிஎஸ், ரேடார் என நவீன கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+