அதிமுக - மதிமுக பேச்சில் தொடர்ந்து இழுபறி - இன்று முடியும் என எதிர்பார்ப்பு
சென்னை: மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிப் பங்கீட்டுக் குழப்பத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இழுபறி அப்படியே நீடிக்கிறது. இருப்பினும் இன்றைக்குள் இந்த இரு கட்சிகளின் பிரச்சினைக்கும் ஜெயலலிதா முடிவு கட்டுவார் எனத் தெரிகிறது.
மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இழுபறியாக உள்ளது. சில முறை இரு கட்சிகளின் தலைவர்களும், ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மதிமுக முதலில் பாமகவுக்கு இணையாக 7 தொகுதிகளைக் கோரியது. பின்னர் ஆறு என இறங்கி வந்தனர். கடைசியாக 5 தொகுதிகளில் வந்து நிற்கின்றனர்.
ஆனால் ஜெயலலிதா 4 தொகுதிகளுக்கு மேல் தருவதற்குத் தயக்கம் காட்டுகிறார். அதேசமயம், ஐந்து தொகுதிகள் தருவதாக இருந்தால் நாங்கள் கொடுக்கும் தொகுதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை நான்கு போதும் என நினைத்தால் நீங்கள் கோருவதை தருகிறோம் என்று கடைசியாக அதிமுக, மதிமுகவிடம் தெரிவித்துள்ளது.
ஆனால் மதிமுக தலைவர்கள் இப்படி நினைக்கிறார்கள். பாமக திமுக கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் தற்போது அக்கட்சிக்கு 7 சீட்டும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தந்துள்ளனர்.
அதேபோல, கடந்த முறை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டனர். இப்போது அவர்களுக்கு தலா 3 தொகுதிகளை ஒதுக்க அதிமுக தயாராக உள்ளது.
அப்படி இருக்கையில், கடந்த முறை 4 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவுக்கு கூடுதலாக ஒரு இடம் ஒதுக்குவதுதானே நியாயம். இதை நாங்கள் கேட்பதில் என்ன தவறு என்கிறார்கள் மதிமுகவினர்.
ஆனால் அதிமுக கூறும் கணக்கு வேறு மாதிரியாக இருக்கிறது. மதிமுக கடந்த முறை நான்கு தொகுதிகளில் போட்டியிட்டாலும் கூட தற்போது அவர்களிடம் இருப்பது 2 பேர்தானே. அந்த இரண்டு பேர் தவிர கூடுதலாக இரண்டு சீட் தருகிறோம். இது போதாதா என்று விட்டலாச்சாரியா கணக்கை கூறுகிறதாம் அதிமுக.
சரி போனால் போகிறது, நான்கு தொகுதிகளை ஏற்றுக் கொள்ளலாம் என்று பார்த்தால் விரும்பிய தொகுதிளையும் தர மறுப்பதால் அதிமுக மீது மதிமுக பெரும் மனஸ்தாபத்தில் உள்ளதாம்.
இது மதிமுகவின் நிலை. சிபிஎம் நிலை வேறு மாதிரியாக இருக்கிறது.
சிபிஎம் கேட்கும் 3 என்ற எண்ணிக்கைக்கு அதிமுக மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டு விட்டது. இவர்களைப் பொறுத்தவரை தொகுதிகள் எவை என்பதில்தான் குழப்பமாக உள்ளது.
திருப்பூர் கண்டிப்பாக வேண்டும் என பிடிவாதமாக நிற்கிறதாம் சிபிஎம். ஆனால் அதை தர முடியாது. நாங்களே போட்டியிடப் போகிறோம் என்கிறார் ஜெயலலிதா.
இந்த ஒரு தொகுதியால்தான் சிபிஎம் - அதிமுக தொகுதிப் பங்கீடு முடியாமல் நீடிக்கிறதாம்.
இப்படி இரு கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் நீடித்துக் கொண்டிருக்கிறது. மறுபறும் திமுக கூட்டணி சத்தம் போடாமல் தொகுதிப் பங்கீட்டை முடித்து, வேட்பாளர்களையும் அறிவிக்க ஆரம்பித்து விட்டது.
இதனால் இன்றைக்குள் இந்தப் பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ஜெயலலிதா விரும்புகிறாராம். எனவே இன்று அதிமுக சார்பில் மதிமுக மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளுடன் இறுதி கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்க்க முனைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை












Click it and Unblock the Notifications