For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடமில்லையா..?: குமரி காங். போஸ்டரால் பரபரப்பு

By Staff
Google Oneindia Tamil News

மார்த்தாண்டம்: காமராஜரின் மானம் காத்த கன்னியாகுமரியில், காங்கிரஸுக்கு இடமில்லையா என்று கேட்டு ஒட்டப்பட்ட போஸ்டரால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணியில் வழக்கமாக கன்னியாகுமரி கூட்டணிக்கு கட்சிக்கே ஒதுக்கப்படும். இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெரும் கட்சி அல்லது கூட்டணி கட்சியே மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்ற செண்டிமெண்ட் தொடர்கிறது.

தி்முக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிற்கு ஒதுக்காமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு அப்போது காங் நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருப்பினும் மத்தியில் காங் ஆட்சி வர வேண்டும் என்ற எண்ணத்தில் காங் நிர்வாகிகள் அன்று முழு விச்சில் களத்தில் இறங்கினர். மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லர்மின் அதிகமாக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வரும் லோக்சபா தேர்தலை ஓட்டி தமிழகத்தில் கூட்டணி மாற்றம் ஏற்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு இத்தொகுதி ஓதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுகவிற்கு ஓதுக்கப்பட்டது. வேட்பாளராக ஹெலன் டேவிட்சன் அறிவிக்கப்பட்டார்.

இது காங் நிர்வாகிகள் மத்தியில் கடுமையான அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், காங் தொண்டர்கள் சார்பில் மாவட்ட அளவில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில் கை சின்னம் சோனியா, காமராஜர் படம் இடம் பெற்றுள்ளது. நீங்கள் போட்டியிட்டு வென்ற உங்கள் மானம் காத்த கு்மரியில் காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லையோ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்களால் திமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X