கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு தனித்து போட்டி?
கோவை: கிறிஸ்துவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது இல்லையெனில் திருப்பூர், கோவை, நீலகிரியில் வேட்பாளர்களை நிறுத்துவது என்று அனைத்து கிறித்தவ மக்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
அனைத்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் கோவையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சாக்ரடீஸ் தலைமை தாங்கினார். ஸ்டீபன், அமிர்தம் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில்,
இந்து மதத்தில் இருந்து தலித் கிறிஸ்துவர்களாக ஏற்கனவே மதம் மாறியவர்கள் மீண்டும் இந்துவாக மாறினால் அட்டவணை பட்டியலில் சேர்க்கப்பட்டு அதற்குரிய சலுகை வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும்.
கிறிஸ்துவ தேவலயங்கள் கட்ட விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகள் தவிர்க்கபட்ட வேண்டும். கிறிஸ்துவர்களின் கல்லறை தோட்டத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர உறுதி அளிக்கும் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
இல்லாவிட்டால் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதிகளில் கூட்டமைப்பு சார்பில் வேட்பாளர்களை தனியாக நிறுத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications