குமரியில் தேசியவாத காங்கிரஸ் போட்டி
குமரி: கன்னியாகுமரியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் டன்ஸ்சன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாகர்கோவிலில் அவர் கூறுகையில்,
தேசியவாத காங் சார்பில் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட கட்சியின் மாநில பொதுசெயலாளர் வளவன் அடைக்கலராஜ், மாவட்ட பொதுசெயலாளர் சிவலிங்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜூனைத், மாவட்ட துணை தலைவர் செல்வம் உள்ளிட்டோர் விருப்ப மனு கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர்.
எங்கள் இலக்கை மையப்படுத்தி 10லட்சம் நோட்டீஸ்கள் அச்சடித்து வீடு வீடாக சென்று ஓட்டு கேட்போம்.
தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இந்த தொகுதிக்கு திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அதிருப்தியடைந்த காங்கிரசார் சிலர் மற்ற மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி வகிக்கும் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்.
பல மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வரும் அகில இந்திய பொது செயலாளர் தாரிக் அன்சாரி, கேரள அமைச்சர் சண்முகதாஸ், கேரள மாநில தலைவர் முரளிதரன், அகில இந்திய செயலாளர் சாரதி, மாநில தலைவர் திணடிவனம் ராமமூர்த்தி ஆகியோர் தேர்தல் பிரசாரத்திற்கு குமரி மாவட்டம் வருகை தர உள்ளனர். வேட்பாளரை இன்னும் ஒரிரு நாளில் அறிவிக்க உள்ளோம் என்றார்.