போடிநாயக்கனூர்-3 மாதத்தில் 1100 பேருக்கு நாய்க்கடி

Subscribe to Oneindia Tamil

போடிநாயக்கனூர்: தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 1100 பேரை நாய் கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். பெருகி விட்ட நாய்த் தொல்லையிலிருந்து தப்ப வழியில்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் மார்ச் 31ம் தேதி வரை ரேபிஸ் தாக்கிய நாயிடம் சிக்கி 1085 பேர் கடிபட்டுள்ளனர். மார்ச் 31ம் தேதிக்குப் பிறகு இதுவரை 33 பேரை நாய் கடித்துள்ளதாக போடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி மனோகரன் கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை நாய் கடித்து யாரும் இறக்கவில்லையாம். நாய் பிடிக்க ஊழியர்கள் போதிய அளவில் இல்லை. இதனால் நாய் பிடிப்பதும் முறையாக செய்யப்படுவதில்லை. இதனால்தான் நாய்கள் பெருத்து விட்ன. நாய் கடித்து சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மனோகரன் கூறுகிறார்.

தேவி என்ற கல்லூரி மாணவி கூறுகையில், ஒரு நாளைக்கு ஐந்து பேரை நாய் கடித்து விடுகிறது. நாய்களிடமிருந்து தப்ப ஆட்டோ போன்ற வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. இரு சக்கர வாகனங்களில் போனால் கண்டிப்பாக நாயிடம் சிக்காமல் தப்ப முடியாது என்ற நிலை.

பகலில் கூட தப்பி விட முடிகிறது. ஆனால் இரவு நேரங்களில் டூவீலர்களில் எந்தத் தெருவிலும் போக முடியவில்லை என்கிறார் பீதியுடன்.

நறுமணப் பொருட்களுக்குப் பெயர் போன போடி நாயக்கனூரில் பெருகி விட்ட நாய்க் கடிக்கு முடிவே இல்லையா என்று மக்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+