124 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது
டெல்லி: முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 124 தொகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. இங்கு 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
லோக்சபா தேர்தல் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 124 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இங்கு பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் மாநிலங்கள் மற்றும் தொகுதிகள் ..
ஆந்திரா (22), கேரளா (20), உத்தரபிரதேசம் (16), பீகார் (13), மகாராஷ்டிரா (13), சட்டீஸ்கர் (11), ஒரிசா (10), ஜார்கண்ட் (6), அஸ்ஸாம் (3), அருணாச்சலபிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிக்கோபார் (1), லட்சத்தீவு (1), மிசோராம் (1), நாகலாந்து (1), மணிப்பூர் (1), ஜம்மு காஷ்மீர் (1).
கேரளாவில் 217 வேட்பாளர்கள்...
கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 16ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 23ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடந்தது. இதில் 217 வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பிரகாஷ் கரத், இந்திய கம்யூனிஸ்ட் பொது செயலாளர் பரதன் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.
கடந்த 2 வாரங்களாக இங்கு பிரசாரம் நடந்து வந்தது.
மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பதட்டம் நிறைந்த தொகுதிகளாக கண்டறியப்பட்டு காசர்கோடு, கண்ணூர் தொகுதிகளில் மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்ட வாக்கு பதிவில் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள்:
பீகார் - சரன் - லாலு பிரசாத் யாதவ்.
மகாராஷ்டிரா - பந்தாரா-கோன்டியா - பிரபுல் படேல்.
உ.பி. - வாரணாசி - முரளி மனோகர் ஜோஷி
ஆந்திரா - மகபூப் நகர்- சந்திரேசகர் ராவ், ஸ்ரீகாகுளம் - எர்ரான் நாயுடு.
கேரளா - திருவனந்தபுரம் - சசிதரூர்.
-
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications