For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 வார பரோலி்ல் வெளியே வரும் வருண் காந்தி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக இளம் தலைவர் வருண் காந்திக்கு 2 வார கால பரோலை அளித்துள்ளது சுப்ரீம் கோர்ட்.

மேலும், எடா மாவட்ட எஸ்.பியிடம் புதிய உத்தரவாதம் ஒன்றை கொடுக்குமாறும் அது வருணுக்கு உத்தரவிட்டுள்ளது.

தன்னை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை ரத்து செய்ய வேண்டும், தேர்தலில் போட்டியிட வசதியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி வருண் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை கடந்த முறை விசாரித்தபோது, இனிமேல் மத கலவரத்தை தூண்டும் வகையிலோ, அரசியல் சட்டத்திற்குப் புறம்பாகவோ பேச மாட்டேன் என வருண் காந்தி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.

இதற்கு வருண் காந்தி சம்மதம் தெரிவித்து உத்தரவாத பிரமாணப் பத்திரத்தை தனது வக்கீல் மூலம் மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அதை அவர் சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில், இன்று வருண் காந்தி மீதான ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. அதன் பின்னர் 2 வார காலம் பரோலில் செல்ல வருணுக்கு அது அனுமதி அளித்தது.

மேலும் எடா மாவட்ட எஸ்.பியிடம் புதிதாக ஒரு உத்தரவாத பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வருணுக்கு அது உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X