பழனியிலிருந்து திருப்பூர் வந்த கார்வேந்தன்
முதலில் இந்த திருப்பூர் தொகுதியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டார். ஆனால் கார்வேந்தன் விடாப்பிடியாக இருந்து தொகுதியைப் பெற்று விட்டார்.
தந்தை பெயர் குப்புசாமி கவுண்டர். தாயார் காளியாத்தாள். ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சாலார்பட்டி கிராமத்தில் பிறந்தார். வென்மதி என்ற மனைவியும், 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.
பி.எஸ்.சி, பிஜிஎல், பிஎல், டிபிஏ, டிஎம்எம், டியூஎன்ஐயூஎஸ் என நிறையப் படித்துள்ளார்.அடிப்படைத் தொழில் வழக்கறிஞர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக கட்சிப் பணியை தொடங்கினார்.
1996ம் ஆண்டு தமாகா சார்பில் லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1998ம் ஆண்டு தமாகா சார்பில் போட்டியிட்டு மதிமுகவிடம் தோல்வியுற்றார்.
பின்னர் 2004ம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பழனியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2வது முறையாக எம்.பி. ஆனார்.
தற்போது பழனி தொகுதி போய் விட்டதால் திருப்பூருக்கு வந்துள்ளார்.
கொங்கு வேளாள கவுண்டர் பிரிவைச் சேர்ந்த கார்வேந்தன் ஜாதி பலத்தையும், திமுக-காங்கிரஸ் கூட்டணியின் பலத்தையும் நம்பி களம் இறங்கியுள்ளார்.