அச்சுறுத்திய பிஜிலி-தப்பிய தமிழகம்-வங்கதேசத்தை இன்று தாக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் உருவாகி, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மையமிட்டிருந்த பிஜிலி புயல் ஒரு வழியாக ஒரிசாவைக் கடந்து வங்கதேசத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

வங்கக் கடலில் ஒரு வாரத்திற்கு முன்பு பிஜிலி என்ற புயல் உருவானது. இது வலுப்பெற்று தொடர்ந்து மையம் கொண்டிருந்ததால் தமிழகத்தின் தென் பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது.

தமிழகத்தை அது தாக்கக் கூடும் என அஞ்சப்பட்டது. ஆனால் திடீரென அது ஆந்திரா பக்கம் நகர்ந்தாதல் தமிழகத்திற்கு ஆபத்தில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் பிஜிலி புயல் நேற்று ஒரிசாவைக் கடந்து போய் விட்டது. தற்போது அது வங்கதேசத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்புயல், இன்று வங்காளதேசத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கிடையே தமிழகத்தில் கடும் வெயில் நிலவி வருவதற்கு, கடல் காற்றுக்கு முன்பாக தரைக் காற்று வீசத் தொடங்கியிருப்பதே காரணம் என வானிலை மையம் விளக்கியுள்ளது.

முதலிலேயே கடற்காற்று வீசிவிட்டால் வெப்பநிலை இயல்பானதாக இருக்கும். காலநிலையை பொறுத்துத்தான் ஒரு இடத்தில் வெப்பநிலை இயல்பானதாகவும் அதிகமாகவும் அமைந்திருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் விளக்கியுள்ளார்.

வேலூரில் 105 டிகிரி வெயில்

இதற்கிடையே நேற்று தமிழத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. தமிழகத்தின் பல முக்கிய நகரங்களிலும் வெயில் 100 டிகிரியளவுக்கு வெளுத்து வாங்கியது.

சென்னை 100, மதுரை 100.4 என வெயில் கொளுத்தியது. கோவையில்தான் குறைந்தபட்சமாக 95 டிகிரி வெயில் அடித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+