விமான நிலைய பாலத்தில் மோதிய மும்பை-மங்களூர் விமானம்
மும்பை: மும்பையில் இருந்து மங்களூர் கிளம்ப தயாராகி கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று பயணிகள் விமானத்தில் ஏற உதவும் பாலம் போன்ற அமைப்பில் மோதியது. இதில் விமானத்தின் கதவு உடைத்தது.
இன்று காலை 11 மணிக்கு மும்பையில் இருந்து மங்களூர் நோக்கி 172 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட தயாராகி கொண்டிருந்தது.
விமான நிலையத்தில் இருந்து சிக்னல் கிடைத்ததும் விமானத்தை மெல்ல நகர்த்த துவங்கினர். அப்போது அந்த விமானம் அருகில் அருகில் இருந்த பயணிகள் விமானத்துக்குள் ஏற உதவும் பாலம் போன்ற அமைப்பின் மீது மோதியது. இதில் அந்த விமானத்தின் கதவுகள் உடைந்தன.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இந்த மோதல் காரணமாக விமானம் 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக கிளம்பியது. அதிலிருந்த பயணிகள் வேறு விமானத்தின் மூலம் பகல் 12.20 மணிக்கு மங்களூர் அனுப்பப்பட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications