தமிழகத்தில் போலீசுக்கு புகார் கொடுக்க புதிய வசதி
சென்னை: தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் காவல்துறைக்கு புகார் கொடுக்க மூன்று எண்களை கொண்ட தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி மையம் சென்னையில் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை டிஜிபி அலுவலக செய்தி குறிப்பு:
சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை துவக்கப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் இயங்கும் தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி நிறுவப்பட்டுள்ளது.
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் மக்கள் 044 28447200 என்ற பிஎஸ்என்எல் தொலைபேசி எண் அல்லது 044 64555100 மற்றும் 64556100 என்ற இரண்டு டாடா இண்டிகாம் தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம். இந்த மூன்று எண்களும் பிரத்யேகமாக இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இந்த மூன்று எண்களையும் தவிர்த்து நேரடி அவசர உதவிக்கு எப்போதும் போல் 100 என்ற தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம்
தமிழ்நாட்டின் எந்தப்பகுதியில் இருக்கும் மக்களும், தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க எந்த நேரத்திலும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் இச்சேவையை பயன்படுத்தி உதவி பெறலாம்.
இந்த தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசியில் பதிவு செய்யப்படும் புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications