உத்தர பிரதேசம்-மீண்டும் தலைதூக்கிய காங்கிரஸ்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிதான் இன்று அரசியல் களத்தில் பெரும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இம்மாநிலத்தில் 21 தொகுதிகளைப் பெற்று மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு இணையாகத் திகழ்கிறது காங்கிரஸ்.
காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்ந்த இந்த மாநிலத்தில், ஒரு கட்டத்தில் அக்கட்சி காணாமலே போயிருந்தது. அமேதி, ரேபரேலி தவிர பிற தொகுதிகளைப் பற்றி சொல்லிக் கொள்ளும் நிலை இல்லாமலிருந்தது.
இதனால் மாநில கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளை நம்பியிருக்கும் நிலை.
ஆனால் இந்த நிலையை அடியோடு மாற்றி மீண்டும் காங்கிரஸ் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது உபியில்.
இதற்கு முக்கியக் காரணம் ராகுல் காந்தியின் அணுகுமுறையே என்று புகழ்கின்றனர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.
இதுவரை வெளிவந்துள்ள விவரங்களின்படி காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது உபியில். பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளும் இதே எண்ணிக்கையில்தான் இங்கு தொகுதிகளைப் பெற்றுள்ளன.
இதனால் கிட்டத்தட்ட இரண்டு தேர்தல்களுக்குப் பிறகு உபியில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications