ரிவர்ஸில் போன சென்செக்ஸ்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: தேர்தல் முடிவுகளுக்குப் பின் பங்கு வர்த்தகம் ஆரம்பித்த முதல் நாளில் தாறுமாறான உயர்வைச் சந்தித்து உலக சந்தைகளை ஆச்சர்யப்படுத்திய சென்செக்ஸ் இன்று 241 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 48 புள்ளிகள் சரிந்தன. துவக்கத்திலிருந்தே சரிவுப் போக்கு காணப்பட்டதால் வர்த்தகம் இன்று டல்லடித்துக் காணப்பட்டது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட அசாதாரண உயர்வுக்கு, இந்த வீழ்ச்சி ஒரு கரெக்ஷன் போன்றதுதான் என்று தேசிய பங்குச் சந்தை புரோக்கர் ராஜீவ் மாலிக் கூறினார்.
டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, டாடா ஸ்டீல் மற்றும் ஹிண்டால்கோவின் பஹ்குகள் நல்ல லாபம் கண்டன.
டிஎல்எப், பிஎச்இஎல், ஐசிஐசிஐ போன்ற நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 14,060 புள்ளிகளாகவும், நிப்டி 4,270 புள்ளிகளாகவும் நிலைப் பெற்றது.












Click it and Unblock the Notifications